உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையாணை பெற்றது திமுக தான் – அமைச்சர் ஓ.எஸ்.மணியன்

உள்ளாட்சி தேர்தலை நடத்த தடையாணை பெற்றது திமுக தான் என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார். ஒகி புயலில் காணாமல் போன நாகை மீனவர்களின் குடும்பத்தினருக்கு இரண்டாவது கட்டமாக நிவாரண உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியன் பயனாளிகளுக்கு நிவாரண உதவிகளை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டிடிவி தினகரனுக்கு ஆதரவளித்த 3 எம்.எல்.ஏக்களுக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அவர்களது அளிக்கும் பதிலின் அடிப்படையில், நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்ட அவர், அதிமுக ஆட்சியை கலைக்க வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக கூறினார்.

Exit mobile version