உடம்பை கட்டுக்கோப்பாக வைக்கணுமா?-அம்மா உடற்பயிற்சி கூடம் தயார்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இளைஞர்களுக்காக அம்மா உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

அதன்படி பெரம்பலூர் மின் நகரில் 10 லட்சம் மதிப்பீட்டில் அம்மா உடற்பயிற்சி கூடமும் , 20 லட்சம் ரூபாயில் அம்மா பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழாவிற்கு எம்.எல்.ஏ.க்கள் தமிழ்செல்வன், ராமச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் மருதராஜா உடற்பயிற்சி கூடத்தையும், பூங்காவையும் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய எம்.ல்.ஏ., தமிழ்செல்வன் இளைஞர்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள முதலமைச்சர் பழனிசாமி, பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருவதாக கூறினார்.

Exit mobile version