உச்சத்தை தொடும் பெட்ரோல், டீசல் விலை

கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு புதிய உச்சத்தை எட்டியுள்ளது. லிட்டருக்கு 80 ரூபாயை தாண்டியுள்ள பெட்ரோல் விலையால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இன்றும் அதன் விலை அதிகரித்துள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெட்ரோல் லிட்டருக்கு 41 காசுகள் அதிகரித்து 83 ரூபாய் 54 காசுகளாகவும், டீசல் விலை 47 காசுகள் அதிகரித்து 76 ரூபாய் 64 காசுகளாகவும் உள்ளன. தொடர்ந்து உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வால், அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது.

Exit mobile version