இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த மூன்று பேர் கைது !

இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வந்த மூன்று பேர் மதுரை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.

இலங்கை தலைநகர் கொழும்புவிலிருந்து மதுரைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. இதில் தங்கம் கடத்தி வரப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பயணிகளிடம் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சதீஸ், அப்துல் பாஸித் மற்றும் ஷேக் தாவூத் ஆகியோரை சோதனை செய்ததில் அவர்களிடம் இருந்து 518 கிராம் தங்கக் கட்டிகள் கைப்பற்றப்பட்டன.

இதன் மதிப்பு சுமார் 16 லட்சம் ரூபாயாகும். மூன்று பேரையும் கைது செய்த சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

Exit mobile version