இமாச்சல பிரதேசத்தில் கனமழை; தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர் சிக்கி தவிப்பு

இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர், அங்கு பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ள பாதிப்பில் சிக்கி தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இமாச்சல பிரதேசம், பஞ்சாப் மற்றும் அரியானா உள்ளிட்ட வடமாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மழையால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக பல்வேறு இடங்களில் சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. மாநிலத்தில் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மணாலியில் தொடர் மழை மற்றும் மண்சரிவால், சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த 70க்கும் மேற்பட்டோர், சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மண்சரிவு ஏற்பட்டு, போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால், திரும்ப முடியாமல் அவர்கள் சிக்கி இருப்பதாக தெரியவந்துள்ளது.

Exit mobile version