இன்ஃபார்மர் படுகொலை – சென்னையில் துணிகரம்

மதுரவாயல் அருகே காவல்துறைக்கு தகவல் சொன்ன இளைஞர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருகம்பாக்கம், காந்தி நகரை சேர்ந்தவர் மணிகண்டன் என்ற புறா மணி. இவர் மீது வழிப்பறி, செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

வானகரம் மீன் மார்க்கெட் அருகே புறா மணி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். மதுரவாயல் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சில வாரங்களுக்கு முன்பு, எந்த திருட்டு வழக்கிலும் ஈடுபடமாட்டேன் என்று, விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் மணி எழுதி கொடுத்து இருந்தார். அதன் பிறகு கோடம்பாக்கத்தில் நடந்த குற்ற சம்பவத்தில் கொள்ளையர்களை பிடிக்க மணி உதவியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக மணி கொல்லப்பட்டாரா என்ற கோணத்தில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மணியுடன் சென்று தற்போது தலைமறைவாக உள்ள அஸ்வத் என்பவரை போலீசார் தேடிவருகின்றனர்.

 

Exit mobile version