இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு – டெல்லியில் இன்று ஆலோசனை

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து டெல்லியில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

ரூபாய் மதிப்பு சரிவு, வர்த்தக பற்றாக்குறை ஆகிய பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது குறித்து விவாதிப்பதற்காக மத்திய தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தலைமையில் பல்வேறு அமைச்சகங்களுக்கு இடையேயான கூட்டம் இன்று நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய நிதியமைச்சகம் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் துறைகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு 13 சதவீதம் குறைந்துள்ளது. இதனால் ஏற்றுமதி, இறக்குமதியில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version