இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் – நாளை தொடக்கம்

இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை தொடங்குகிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு, இரண்டு டெஸ்ட், 5 ஒரு நாள் மற்றும் 3 இருபது ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

இங்கிலாந்து சுற்றுப் பயணத்தில் டெஸ்ட் தொடரை 4 க்கு ஒன்று என்ற கணக்கில் இழந்த இந்திய அணி, சொந்த மண்னில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொள்கிறது.

சொந்த மண்ணில் தொடர்ச்சியாக 9 டெஸ்ட் தொடரை கைப்பற்றி சாதனை படைத்த இந்திய அணி, 10 வது முறையாக தொடரை வெல்லும் முனைப்பில் உள்ளது.

ஓய்வுக்குப் பிறகு கேப்டன் விராட் கோலி அணிக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த இரு அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத்தில் உள்ள ராஜ்கோட் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

Exit mobile version