இந்தியாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த வேண்டும் – அமெரிக்க அதிபர் டிரம்ப்

இந்தியாவை வரிவிதிப்பு ராஜா எனப் புகழ்ந்துள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.

அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ இடையே 25-ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தில் மாற்றம் செய்யப்பட்டு உடன்பாடு கையெழுத்தாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய அதிபர் டோனால்டு டிரம்ப், இந்தியாவை வரிவிதிப்பு ராஜா என்று குறிப்பிட்டார்.

இதுகுறித்து விளக்கம் அளித்த அவர், அமெரிக்க பொருட்களுக்கு இந்தியாவில் மிக அதிக அளவு வரி விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அதிக வரி விதிக்காமல் இருக்க, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள இந்தியா விரும்புவதாக அவர் கூறினார்.

இதற்கான பேச்சுவார்த்தை உடனே தொடங்கப்பட வேண்டும் என்று டிரம்ப் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version