இடைத்தேர்தல் எப்போது வந்தாலும் அதை சந்திக்க அதிமுக தயார் – முதலமைச்சர் பழனிசாமி

திருப்பரங்குன்றம் தொகுதிக்கு இடைத்தேர்தல் எப்போது வந்தாலும், அதை சந்திக்க அதிமுக தயாராக இருப்பதாக முதலமைச்சர் பழனிசாமியும், 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி உறுதி என்று துணை முதலமைச்சரும் தெரிவித்துள்ளனர்.

மதுரையில் நடைபெற்ற அதிமுக ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை கூட்டாக சந்தித்த அவர்கள், திருப்பரங்குன்றம் அதிமுகவின் கோட்டை என்றனர்.

அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் இருப்பதாகவும், இடைத்தேர்தலில் வெற்றி உறுதி என்றும் அவர்கள் கூறினர்.

7-ம் தேதி அதீத மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரித்து இருப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும், எதையும் எதிர்கொள்ள தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் கூறினார்.

தமிழகத்துக்கு எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் வரும் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக பிரதமரை சந்திக்க இருப்பதாகவும் கூறினார்.

 

Exit mobile version