இங்கிலாந்தில் உள்ள தொழிலதிபர் நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் – சிபிஐ கோரிக்கை

47 வயதான தொழிலதிபர் நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14 ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று விட்டு, அதனைத் திருப்பி செலுத்தாமல் வெளிநாடு தப்பிச்சென்றார். இதனையடுத்து, வங்கி மோசடி வழக்கில் அவர் , தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு உள்ளார். இந்நிலையில், நீரவ் மோடி, இங்கிலாந்தில் இருப்பதை அந்நாட்டு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதையடுத்து, அவரை இந்தியாவுக்கு நாடு கடத்துமாறு சிபிஐ கோரிக்கை விடுத்துள்ளது.

 

Exit mobile version