ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலை – காத்திருக்கும் திருமலை வேங்கடவன்

திருமலை வெங்கடேச பெருமாள் கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

முக்கிய நிகழ்வான கருடசேவை தினத்தன்று, பெருமாளுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை அணிவிக்கப்படுவது வழக்கம். இது பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் வைபவம் ஆகும்.

திருமலையில் நாளை மறுநாள் கருட சேவை விழா நடைபெற இருப்பதால், ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் இருந்து ஆண்டாள் சூடிக் கொடுத்த மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்டன. முன்னதாக ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னர் ஆண்டாளுக்கு அணிவிக்கப்பட்ட மாலை, கிளி, பரிவட்டம் ஆகியவை நான்கு மாட வீதிகளில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. திருப்பதிக்கு கொண்டு செல்லப்பட்ட இவை, நாளை மறுநாள் பெருமாளுக்கு சார்த்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெறும்.

Exit mobile version