அற்புதம்மாள் உருக்கமான கோரிக்கை!

7 பேரின் விடுதலைக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க வேண்டும் என்று பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், 28 ஆண்டுகால போராட்டம் இப்போது தான் முடிவிற்கு வந்துள்ளது என்றார்.

ஆளுநர் கையொப்பத்தில் தான் முடிவு உள்ளது, எனவே அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக அற்புதம்மாள் தெரிவித்தார். விரைவில் விடுதலை கிடைத்தால்தான் மகனுடன் சிறிதுகாலம் வாழ முடியும் என உருக்கமாக அவர் கூறினார்.

ராஜீவ்காந்தி கொலையில் உண்மைக் குற்றவாளி யார் என்பதையும் கண்டறிய வேண்டும் என்பது தான் பேரறிவாளனின் முக்கிய கோரிக்கையாக உள்ளது எனவும் அற்புதம்மாள் தெரிவித்தார்.

Exit mobile version