அறிமுக போட்டியிலேயே சதமடித்து அசத்திய பிரித்வி ஷா!

மேற்கிந்தியத் தீவு அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 18 வயதேயான இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி உள்ளார்.

இந்தியா – மேற்கிந்திய தீவு அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய டெஸ்ட் அணியின் 293-வது வீரராக அறிமுகமான பிரித்வி ஷா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர்.

எந்தவித பதற்றமும் இல்லாமல் அதிரடியாக விளையாடிய பிரித்வி ஷா, 99 பந்துகளில் சதம் அடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். இதன் மூலம், அறிமுகப்போட்டியில் சதமடித்த 15-வது வீரர் என்ற பெருமையை இந்திய இளம் வீரர் பிரித்வி ஷா பெற்றுள்ளார். இதனிடையே, அறிமுகமான முதல் போட்டியிலேயே சதம் விளாசி சாதனை படைத்த பிரித்வி ஷாவுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version