அருண்ஜேட்லிக்கு தெரிந்தே, விஜய்மல்லையா வெளிநாடு தப்பினார் – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லிக்கு தெரிந்தே, விஜய்மல்லையா வெளிநாடு தப்பியதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.

ஆந்திர மாநிலம் கர்னூலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பங்கேற்று பேசினார். அப்போது, பொதுத்துறை வங்கிகளில் 9 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய தொழிலதிபர் விஜய் மல்லையா, மத்திய நிதியமைச்சர் அருண்ஜேட்லியுடனான ரகசிய ஒப்பந்தத்தால் தான் வெளிநாடு தப்பிச் சென்றதாக குற்றம்சாட்டினார்.

இதற்கு பதிலளிக்காமல் பிரதமர் மோடியும் மௌனம் சாதிப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார். ரபேல் போர் விமானங்களை வாங்க முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் 526 கோடி ரூபாய் ஒப்பந்தம் போடப்பட்டதாகவும், இதனை மோடி அரசு ஆயிரத்து 600 கோடி ரூபாய்க்கு உயர்த்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து உள்ளிட்ட பிரச்சனைகளை மத்திய அரசு கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும் ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.

Exit mobile version