அரிவாளால் வெட்டி டாஸ்மாக் பணத்தை கொள்ளையடித்த ஹெல்மெட் கொள்ளையர்.

 

திருவாரூர் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி 5 லட்சத்தை பறித்து சென்ற ஹெல்மெட் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டம் சேங்காலிபுரத்தை சேர்ந்த கர்ணன் என்பவர் எரவாஞ்சேரியில் உள்ள அரசு மதுபான கடையில் மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் டாஸ்மாக் கடையில் வசூலான 5 லட்ச ரூபாயை வங்கியில் கட்டுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது சீகார்பாளையம் என்ற இடத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள் கர்ணனை வழி மறித்து வெட்டி, பணத்தை பறித்துச்சென்றனர்

இந்த சம்பவத்தில் கர்ணனுக்கு இடது காதில் பலத்த வெட்டு விழுந்தது. நன்னிலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கர்ணனை , மாவட்ட காவல் கண்காணிப்பளர் விக்ரமன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். பணத்தை பறித்து சென்ற மர்ம நபர்கள் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவர்களை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Exit mobile version