அமெரிக்காவை அச்சுறுத்தும் ஃபுளோரன்ஸ் புயல் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

அமெரிக்காவில் தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால், அட்லாண்டிக் கடல் பகுதியில் ஒரு புயல் உருவாகி உள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலுக்கு “ஃபுளோரன்ஸ்” என பெயரிட்டப்பட்டுள்ளது.

இந்த புயலானது, அடுத்த 40 மணி நேரத்திற்குள் அமெரிக்காவை தாக்கும் என்றும், இது கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் உள்ள 17 லட்சம் மக்கள் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

அமெரிக்காவில் மையம் கொண்டு உள்ள “புளோரன்ஸ்” புயலானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு அல்லது தெற்கு கரோலினாவை தாக்கும் என தகவல்கள் கூறுகின்றன. மிகவும் ஆபத்தான இந்த புயலால், 10-15 அங்குலம் அளவுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த புயலால் தெற்கு கரோலினா, விர்ஜினியா, வடக்கு கரோலினா ஆகிய மாகாணங்கள் பாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் புயல் பற்றி தனது ட்விட்டர் பதிவில் எச்சரிக்கை விடுத்திருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “பல வருடங்கள் கழித்து கிழக்குப் பகுதியைப் புயல் தாக்க இருக்கிறது. இது மோசமான புயலாக இருக்கக்கூடும். மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுங்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Exit mobile version