அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கரூரில் மண்டல பயிற்சி வகுப்பு நடைபெற்றது

மீ- டு இயக்கத்தை வரவேற்பதாக அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் தெரிவித்துள்ளது. அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கரூரில் மண்டல பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அந்தச் சங்கத்தின் தலைவி சுகந்தி, பெண்கள் சபரிமலைக்கு செல்லுவது அவர்களது தனிப்பட்ட உரிமை என்றார். சபரிமலை செல்லும் பெண்களுக்குக் கேரள அரசு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

தாங்கள் பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை பெண்கள் தைரியமாக வெளியே சொல்வதற்கு மீ- டூ இயக்கம் வாய்ப்பு கொடுத்துள்ளதாக அவர் கூறினார். எனவே மீ டூ இயக்கத்திற்கு மாதர் சங்கம் ஆதரவு தெரிவிப்பதாகவும் சுகந்தி தெரிவித்துள்ளார்.

Exit mobile version