அங்கன்வாடி ஊழியர்களுக்கு பரிசு – ஊக்கத்தொகை அதிரடியாக உயர்வு!

அங்கன்வாடி பணியாளர்கள், சமூக நல பணியாளர்களுக்கு ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். சரிவிகித ஊட்டச்சத்தின் முக்கியத்துவத்தை நாட்டில் உள்ள அனைவருக்கும் கொண்டு செல்லும் வகையில் செப்டம்பர் மாதம் ஊட்டச்சத்து மாதமாக கொண்டாப்படுகிறது.

இதையொட்டி டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக நலப் பணியாளர்கள்,அங்கன்வாடி பணியாளர்ககளுடன் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். நாட்டின் அடித்தளமான கிராமங்களில் உள்ள மக்களின் சுகாதாரம், புதிதாக பிறந்த குழந்தைகளின் நலன், ஊட்டச்சத்து ஆகியவற்றை பேணிக் காப்பதில் அங்கன்வாடி மற்றும் சமூக நல பணியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பதாக அவர் பாராட்டு தெரிவித்தார்.

அவர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகை, 3 ஆயிரத்திலிருந்து 4 ஆயிரத்து 500 ரூபாயாகவும், 2 ஆயிரத்து 200 ரூபாயிலிருந்து 3 ஆயிரத்து 500 ரூபாயாகவும், உதவியாளர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 500 ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

Exit mobile version